Thursday, March 26, 2009

கடவுளும் மூடநம்பிக்கைகளும் - 2

ஆதிகாலத்தில் மனிதன், தனக்குப் புரியாத விஷயங்களைப் பார்த்துப் பயந்தான்; பின்னர் தான் உண்பவற்றை, அதிலும் தனக்கு மிகவும் பிடித்தமான உணவைக் கொடுத்தால் அவை தன்னை ஒன்றும் செய்யாது என்று நம்பினான். இது ஆதி காலத்தில் மட்டுமா? இன்றும் நடக்கிறது.

கிழங்கு, பழங்களை சாப்பிட்டு வந்த மனிதன் நாகரிக வள்ர்ச்சியின் காரணமாக நெல்லைக் கண்டான். நாக்கின் சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பொங்கல் செய்தான். தனக்குச் சுவையாக தெரிவது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எண்ணி கடவுளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மக்கள் கூடி ஒற்றுமையாக இருப்பதற்கு வேண்டுமானால் இம்மாதிரியான் விஷயங்களை சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மூடநம்பிக்கைகளாக மாறி, பொங்கல் வைத்தால் தான் கடவுள் நினைத்ததைக் கொடுப்பார் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

கடவுளுக்குப் பணம் கொடுப்பது இன்னொரு கலாச்சாரம்.

ஒருவன் தன் தாயிடம் சென்று 'எனக்குப் பிடித்த கத்திரிக்காய் குழம்பு செய்து குடும்மா. உனக்கு 1000 ரூபாய் கொடுக்கிறேன்' என்று சொன்னால் அந்த தாய்க்கு எவ்வளவு கோபம் வரும். பின் ஏன் தன்னை கடவுள் தான் படைத்தார் என்று நம்பும் மக்கள்,பணம், தங்கம், வெள்ளி என்று கோவிலில் கொட்டுகிறார்கள்?

கோவிலில் ஆடு, கோழியின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தால் மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
அதே நேரத்தில் தன் குழந்தையைப் பிடித்துக் கடித்தால் சாமி தான் கடிக்கிறதென்று சும்மா இருப்பார்களா?

வாயில்லா பிராணிகளைக் கொன்று தின்கிறார்களே...........மனிதனை நரபலி கொடுத்தால் மட்டும் ஏன் போலிசுக்குப் போகிறார்கள்? தன்னைப் போலத்தானே அதற்கும் ரத்தம் இருக்கிறது; தன்னைப் போலத்தானே அதுவும் கதறுகிறதென்று ஏன் எண்ணிப் பார்க்கவில்லை?

ஒன்றை கொன்று ஒன்று வாழ வேண்டுமென்பது தான் இயற்கை நியதி. தாவரங்களை மட்டும் கூட தின்று நாம் உயிர் வாழலாமே. நம்மைப் போல் ரத்தமுள்ள, நம்மைப்போல் கதறுகின்ற உயிர்களை விட்டு வைக்கலாமே.

இப்படி யோசித்துக் கொண்டேயிருந்தால் அப்புறம் எப்படி தூக்கம் வரும்? விடிந்தது தான் மிச்சம். எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

2 comments:

கோவி.கண்ணன் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள், அனைத்துக் கருத்துகளையும் உடன்படுகிறேன்

SUMA said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்.

Post a Comment